உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அம்பையில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

Published On 2022-06-04 10:00 GMT   |   Update On 2022-06-04 10:00 GMT
அம்பையில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜயவீரன்(வயது 46). இவர் அம்பையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இதனால் குடும்பத்துடன் அம்பையில் குடியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை பார்த்து வந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்போவதாக கூறி அதனை அடைத்து விட்டனர்.

இதனால் விஜயவீரன் குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் கடந்த 28-ந்தேதி  திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுதொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News