உள்ளூர் செய்திகள்
கடையத்தில் பாரதியார் சிலை திறப்புக்கான ஆலோசனை கூட்டம்
கடையத்தில் பாரதியார் சிலை திறப்புக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடையம்:
கடையத்தில் பாரதியாரின் 125-வது திருமணநாள் விழா சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் வருகிற 27-ந் தேதி அன்று கடையத்தில் பாரதியார் -செல்லம்மாள் சிலைத் திறப்புடன் நடைபெற உள்ளது.
நூலகம் ஒன்று கட்டப்பட்டு அதில் பாரதியார் சிலையும், செல்லம்மா - பாரதி கற்றல் மையம் சேவாலயா சார்பில் 27-ந்தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடையம் பழைய கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கல்யாணி சிவகாமி நாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், தெற்கு கடையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் புளி கணேசன் , மாரி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் லயன்ஸ் கிளப் குமரேசன், ஆசிரியர் கோபால், சேது ராமலிங்கம், சோமசுந்தரம்,சுரேஷ், பாலன் கவியரசன்,சேவாலயா சார்பில் மருத்துவர் கோகுலகிருஷ்ணன், கிங்ஸ்டன், காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர் . சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.