உள்ளூர் செய்திகள்
பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம்
பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பேளூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.