உள்ளூர் செய்திகள்
கைது

திருவட்டார் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

Published On 2022-06-03 08:06 GMT   |   Update On 2022-06-03 08:06 GMT
திருவட்டார் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:

திருவட்டாரை அடுத்த வியன்னூர், கீழ சாய்காடு பகுதியை சேர்ந்தவர் விஜின் ( வயது 31).

விஜின் வீடு அருகே ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 15 வயதான அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது சிறுமியின் வீட்டுக்கு சென்ற விஜின், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அடிக்கடி அவர் இதுபோன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து சிறுமி, பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

மார்த்தாண்டம் போலீசார் தனிப்படை அமைத்து விஜினை தேடி வந்தனர். இதில் நேற்று அவர் சொந்த ஊரான கீழ சாக்கோடு வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு மறைந்திருந்து கண்காணித்தனர். இரவில் விஜின், வீட்டிற்கு வந்த போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News