உள்ளூர் செய்திகள்
காரைக்குடியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்கக் கோரி காரைக்குடி அண்ணா சிலை அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
மாநில விவசாய பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட துணை தலைவர் நாராயணன், மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி வேலங்குடி பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா, பேரூராட்சி கவுன்சிலர் செல்வா, நகர செயலாளர்கள் மலைக்குமார், பழனிக்குமார், நகர துணை தலைவர்கள் கண்ணன், முனியசாமி பாண்டியன், சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.