உள்ளூர் செய்திகள்
.

குமாரபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து

Published On 2022-06-02 08:17 GMT   |   Update On 2022-06-02 08:17 GMT
குமாரபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
குமாரபாளையம்:

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கீர்த்திராஜா,(வயது 27). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் மதியம் குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அப்போது சாலையில் வந்த  கார் இவர் மீது மோதியதில் கீர்த்தி ராஜா பலத்த காயமடைந்தார். 

அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதை குறித்து  குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தில் கரை ஒட்டி வந்தவர் வையப்பமலையை சேர்ந்த காளிதாஸ் (46), என்பது தெரியவந்து.

தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News