உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெண் மாயம்

Published On 2022-05-28 09:14 GMT   |   Update On 2022-05-28 09:14 GMT
மாயமான பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
திருச்சி:

திருச்சி லால்குடி சிறுமயன்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கற்பகம் (வயது 35). இவர் திருமணம் ஆகாத தனது அத்தை ஜெயந்தி (40)யை அழைத்துக் கொண்டு, 

திருச்சி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக மருத்துவ ஆலோசனை பெற வந்துள்ளார். மருத்துவரை சந்தித்த பின்பு அவர் எழுதிக் ெ காடுத்த மருந்துகளை கற்பகம் வாங்கியுள்ளார். 

அதன் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து சென்ற பொழுது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி தனது அத்தை ஜெயந்திை பஸ ஸ்டாப்பில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வாலிபரும் ஜெயந்தியை, தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் கற்பகம் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்றுள்ளார். அங்கு ஜெயந்தி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்த போதும் ஜெயந்தி குறித்து எந்த தகவலும் இல்லை. இதன் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசாரிடம் கற்பகம் புகார் கொடுத்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தி சன்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. ஜெயந்தி கடத்தப்பட்டாரா? அவரைஏற்றி சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News