உள்ளூர் செய்திகள்
கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை- பெண் போலீசின் கணவர் கைது

Published On 2022-05-27 12:03 GMT   |   Update On 2022-05-27 12:03 GMT
ஆலந்துர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் போலீசின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சீட்டு பணம் தொடர்பாக தாயுடன் வீட்டுக்கு வந்த 12 வயது சிறுவனை கார்த்திக் தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். 

இதுகுறித்து பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
Tags:    

Similar News