உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளி மீது பஸ் ஏறி பரிதாப சாவு
சேலம் புதிய பஸ் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி மீது பஸ் சக்கரம் ஏறி பரிதாப இறந்தார்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு அந்த பகுதிகளில் இருந்துவரும் மாற்றுத்திறனாளி செல்வராஜ் (வயது 70)என்பவர் ஏற்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த அரசு பேருந்து திடீரென பின்னால் இயக்கப்பட்டது. இதில் பஸ்சின் பின் சக்கரம் செல்வராஜ் காலின் மீது ஏறி இறங்கியது. இதனால் வலியால் துடித்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டிய தர்மபுரியை சேர்ந்த பச்சமுத்து (வயது44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.