உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பொன்னேரியில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-05-25 12:16 IST   |   Update On 2022-05-25 12:16:00 IST
மாணவன் வினித்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வினித் (வயது19). சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் பொன்னேரியை அடுத்த ஆலாடு கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார்.

இது குறித்து உறவினர்கள் கேட்டபோது மாணவர் வினித் எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் வினித்தின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News