உள்ளூர் செய்திகள்
பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
பணகுடி:
ராதாபுரம் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் மார்ஷலின் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த மார்ஷலின் நெல்லையில் வேலை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் ராதாபுரத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அந்த சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உரசியதாக கூறப்படுகிறது.
இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.இதனால் மார்சலின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராதாபுரம் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் மார்ஷலின் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த மார்ஷலின் நெல்லையில் வேலை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் ராதாபுரத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அந்த சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உரசியதாக கூறப்படுகிறது.
இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.இதனால் மார்சலின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.