உள்ளூர் செய்திகள்
.

சன்னியாசிகுண்டு அருகே என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலி

Published On 2022-05-23 10:06 GMT   |   Update On 2022-05-23 10:06 GMT
சேலம் சன்னியாசிகுண்டு அருகே என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் பலியானார்.
சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை ராமநாதபுரம் ரஷிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெய்விஷ்வா (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசி குண்டு பிரிவு ரோடு அருகே  ெசன்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய ேமாட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் ஜெய்விஷ்வாவின் உடலை பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News