உள்ளூர் செய்திகள்
நகை கொள்ளை

பொன்னேரி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-05-16 09:35 GMT   |   Update On 2022-05-16 09:35 GMT
பொன்னேரி அருகே பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரி (65). இவர் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம வாலிபர் திடீரென ஜெயக்குமாரி அணிந்து இருந்த 6 சவரன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News