உள்ளூர் செய்திகள்
புதுவை பல்கலைக்கழகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-12 09:25 GMT   |   Update On 2022-05-12 09:25 GMT
புதுவை பல்கலைக்கழகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுவை பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். தலித் பழங்குடி கூட்டமைப்பு நீலகங்காதரன், ராமமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தன், பிரின்ஸ்கஜேந்திரபாபு, மார்க்சிஸ்டு ராஜாங்கம், பெருமாள், பாரதி அண்ணா, வாசுதேவன், முத்துக்குமரன், சங்கரன், வாஞ்சிநாதன், சுப்புராயன், பிரவீன், எழிலன், தமிழவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செயய வேண்டும். புதுவையில் நீட் ஒழிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். கியூட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். 

புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திலும் 25 சதவீத இடங்களை புதுவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
Tags:    

Similar News