உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 32,591 மாணவ-மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கடலூர்:
கொரோனா தொற்று தாக்கத்தால் இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கடந்த 5ந் தேதியில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது.
மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளஸ் 1 தேர்வு இன்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வந்தனர். இதில் இன்று காலை முதல் பெய்த திடீர் மழையினால் மாணவ-மாணவிகள் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தொற்று தாக்கத்தால் இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கடந்த 5ந் தேதியில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது.
மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளஸ் 1 தேர்வு இன்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வந்தனர். இதில் இன்று காலை முதல் பெய்த திடீர் மழையினால் மாணவ-மாணவிகள் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.