உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

Published On 2022-05-10 10:50 IST   |   Update On 2022-05-10 10:50:00 IST
வீட்டில் கழிவறை இல்லாததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி ரம்யா (27). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 6-ந்தேதி காதல் திருமணம் செய்தனர்.

இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த ரம்யா திடீர் என தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரம்யாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கார்த்திகேயன் வீ ட்டில் கழிவறை இல்லாததால் ரம்யா அரிசிபெரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்தார். வேறு இடத்தில் வீடு பார்த்து விட்டு அழைத்துச்செல்வதாக ரம்யாவிடம்அவர் கூறினார். ஆனால் வீடு பார்க்கவில்லை.

இது தொடர்பாக தம்பதி இடையே மொபைலில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரம்யா துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததது. இருப்பினும், திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Similar News