உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
பெற்றோர் காதலை ஏற்க மறுத்ததால் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் சேர்ந்தவர் தனசேகர். இவர் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் சேர்ந்த காவியா ஆகியோர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நானும் காவியா என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தோம். இந்த நிலையில் பெற்றோர் எங்களின் காதலை ஏற்க மறுத்ததால் காவியாவை கடந்த மே 2-ந் தேதி எங்கள் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டேன்.
இதனிடையில் காவியா பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.