உள்ளூர் செய்திகள்
வழக்கு

குடிபோதையில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்- 2 பேர் மீது வழக்கு

Published On 2022-05-09 11:21 GMT   |   Update On 2022-05-09 11:21 GMT
கடலூர் அருகே குடிபோதையில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே குள்ளஞ்சாவடி கோரணப்பட்டு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). அவரது தந்தை பாலகிருஷ்ணன். தம்பி பிரேம்குமார் ஆகியோர் பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலமுருகன் கொழுந்தியா கிரிஜா சம்பவத்தன்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தந்தை பாலகிருஷ்ணன், தம்பி பிரேம்குமார் ஆகியோர் குடிபோதையில் அசிங்கமாக பேசி கொண்டிருந்தனர். இது சம்பந்தமாக சென்று கேட்டபோது கிரிஜாவை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பாலமுருகன் தந்தை மற்றும் தம்பியிடம் கேட்டபோது, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News