உள்ளூர் செய்திகள்
போலீசார் சார்பில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

கடலூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

Published On 2022-04-30 16:47 IST   |   Update On 2022-04-30 16:47:00 IST
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு வரிசை எண்கள் பொறிக்கப்பட்ட புதிய வகை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

கடலூர்:

கடலூர் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்றவற்றை இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து துறை போலீசார் சார்பில் டிரைவருக்கு ஓட்டுனர் உரிமம், வாகனங்களில் அரசு ஆவணங்கள் உள்ளிட்டவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு வரிசை எண்கள் ஒட்டி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு வரிசை எண்கள் பொறிக்கப்பட்ட புதிய வகை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதன் மூலம் புதிய வகை வரிசை எண் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்களில் ஆவணங்கள் சரியாக பராமரிக்க படுவதாக எளிதாக அறியப்படும். மேலும் ஸ்டிக்கர் இல்லாத ஆட்டோக்களை எளிமையாக கண்டறிந்து ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்பதனை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள எளிதாக இருக்கும் என போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தெரிவித்தார். அப்போது போக்குவரத்து துறை போலீசார் உடனிருந்தனர்.

Similar News