உள்ளூர் செய்திகள்
மாயம்

இளம்பெண்-தொழிலாளி மாயம்

Published On 2022-04-26 16:53 IST   |   Update On 2022-04-26 16:53:00 IST
விருதுநகர் அருகே இளம்பெண், தொழிலாளி மாயமானார்கள்.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே உள்ள மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் பாப்பா. இவரதுமகள் காவியச்செல்வி (வயது 22). பட்டதாரியான இவர் திருப்பூரில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று ஊருக்கு வந்த காவியச்செல்வி திடீரென மாயமானார். பலஇடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை 

இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

சாத்தூர் சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் திடீரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News