உள்ளூர் செய்திகள்
பலி

ஜோதிடர் பலி

Published On 2022-04-24 17:00 IST   |   Update On 2022-04-24 17:00:00 IST
புகை மூட்டத்தில் சிக்கி ஜோதிடர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெருவில் குடியிருப்பவர் சரவணன் (வயது 33). ஜோதிட நிலையம் நடத்தி வந்துள்ளார். சரவணனுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள் ளனர். 

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சரவணனுக்கும், அவ ரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு  ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது மனைவி தனது சொந்த ஊரான கேரள மாநிலத்துக்கு சென்றுவிட்டதாகவும் தெரி கிறது. 

சரவணன் மட்டும் ஜோதி டம் பார்க்கும் இடத்திலேயே தங்கி வந்துள்ளார்.  மனைவி பிரிந்து சென்றதில் இருந்து சரவணன் குடிபோதைக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் உள்ளே இருந்து புகை வரு வதைக்கண்டு வீட்டின் உரிமையாளர் கணேசன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைத்தனர். வீட்டி னுள் மயங்கிக் கிடந்த சரவ ணனை மீட்டு ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கள், சரவணன் இறந்து விட் டதாக கூறினர். 

இதுகுறித்து சரவணனின் தம்பி மனோஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.  சிகரெட் நெருப்பால் வீட்டில் தீ பிடித்ததும், அதில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி சரவணன்  இறந்ததும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News