உள்ளூர் செய்திகள்
கார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர் அருகே தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசிய 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா.இளவரசன் (58). தமிழர் நீதிக்கட்சியின் தலைவரான, இவர், கடந்த பிப்ரவரி மாதம் 11ந்தேதி உடையார்பாளையம் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது காரில் ஊருக்கு திரும்பியுள்ளார்.
அப்போது, உடையார்பாளையம் அருகே ஒரு கும்பல் சுபா.இளவரசன் கார் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சுபா.இளவரசன் புகார் அளித்தார். அதன் பேரில், குவாகம் இளந்தமிழன் (28), கழுமங்கலம் உருளை ராஜூ (43), காட்டுமன்னார்குடி வட்டம் சித்தமல்லி ரவிச்சந்திரன் (52),
குவாகம் வெற்றித் தெருவை சேர்ந்த கருப்பையன் (40), சேத்தியாத்தோப்பு இளங்காடு சிவகுமார் (40), கோப்பிலியன் குடிக்காடு சங்கர் (46) ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், மேற்கண்ட 6 நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.
அதன் நகல்களை, திருச்சி சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.
அரியலூர் மாவட்டம், வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா.இளவரசன் (58). தமிழர் நீதிக்கட்சியின் தலைவரான, இவர், கடந்த பிப்ரவரி மாதம் 11ந்தேதி உடையார்பாளையம் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது காரில் ஊருக்கு திரும்பியுள்ளார்.
அப்போது, உடையார்பாளையம் அருகே ஒரு கும்பல் சுபா.இளவரசன் கார் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து, உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சுபா.இளவரசன் புகார் அளித்தார். அதன் பேரில், குவாகம் இளந்தமிழன் (28), கழுமங்கலம் உருளை ராஜூ (43), காட்டுமன்னார்குடி வட்டம் சித்தமல்லி ரவிச்சந்திரன் (52),
குவாகம் வெற்றித் தெருவை சேர்ந்த கருப்பையன் (40), சேத்தியாத்தோப்பு இளங்காடு சிவகுமார் (40), கோப்பிலியன் குடிக்காடு சங்கர் (46) ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், மேற்கண்ட 6 நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.
அதன் நகல்களை, திருச்சி சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.