உள்ளூர் செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் சித்திரக்கார தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (80). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் வழக்குப் பதிந்து குப்புசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி குப்புசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் ஆபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குப்புசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் சித்திரக்கார தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (80). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் வழக்குப் பதிந்து குப்புசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி குப்புசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் ஆபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குப்புசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.