உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு.

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-04-23 15:42 IST   |   Update On 2022-04-23 15:42:00 IST
சிவகாசி அருகே பட்டாசு ஆலை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சிவகாசி

சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் சத்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (44), பட்டாசு ஆலை தொழிலாளி. 

இவரது உறவுமுறை சகோதரரான செல்வகுமார் (39) மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரை சந்தித்த சிவக்குமார் அறிவுரைகள் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் அரிவாளால் வெட்டியதில் சிவக்குமார் காயம் அடைந்தார். இதுதொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர்.


Similar News