உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-04-22 15:42 IST   |   Update On 2022-04-22 15:42:00 IST
ஜெயங்கொண்டத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் வயது 28. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு தற்போது விவசாய வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் மகள் ஜெயந்தி (20) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

தற்போது இருவரும் செங்குந்தபுரம் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.  

நேற்று விவசாய வேலை செய்வதற்காக சேகர் சென்றுவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜெயந்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயந்தியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் தங்களது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் பெண் இறந்ததால் உடையார்பாளையம் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News