உள்ளூர் செய்திகள்
செம்பியன் மாதேவி பேரரசியின் பிறந்தாள் விழா
செம்பியன் மாதேவி பேரரசியின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியின் 1112 பிறந்த நாள் விழா சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு நேற்று செம்பியன் மாதேவி உருவச்சிலைக்கு அலங்காரம் செய்து ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருமானூர் ஒன்றிய சேர்மன் சுமதி அசோக சக்கரவர்த்தி. தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வளனறிவு வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க. சண்முக சுந்தரம், புலவர் வண்ணை கலியபெருமாள், பாளை திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரது உருவச் சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியின் 1112 பிறந்த நாள் விழா சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு நேற்று செம்பியன் மாதேவி உருவச்சிலைக்கு அலங்காரம் செய்து ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருமானூர் ஒன்றிய சேர்மன் சுமதி அசோக சக்கரவர்த்தி. தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வளனறிவு வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க. சண்முக சுந்தரம், புலவர் வண்ணை கலியபெருமாள், பாளை திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரது உருவச் சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.