உள்ளூர் செய்திகள்
அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி
அரியலூர் அருகே சிறுவளூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்குதல் தொடங்கி வைக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 43 மாணவர்களுக்கு மாலை நேர உணவுகள் வழங்கும் விழா அப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை தாங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மாலை நேர உணவுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பள்ளியில் வழங்கப்படும் இந்த சத்தான உணவில், சுண்டல், பட்டாணி, பாசிப்பயறு, நிலக்கடலை, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகிய சிறுதானியங்கள் வழங்கப்படுகிறது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்தி நன்கு தேர்ச்சி பெற வேண்டும். வருகிற மே மாதம் 30 ஆம் தேதி வரை இந்த உணவு வகைகள் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்த மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, கிராமப் பொதுமக்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார்.
விழாவுக்கு ஊராட்சி தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சின்னதுரை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுத்தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். முடிவில் அறிவியல் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் செய்திருந் தனர்.
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 43 மாணவர்களுக்கு மாலை நேர உணவுகள் வழங்கும் விழா அப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை தாங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மாலை நேர உணவுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பள்ளியில் வழங்கப்படும் இந்த சத்தான உணவில், சுண்டல், பட்டாணி, பாசிப்பயறு, நிலக்கடலை, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகிய சிறுதானியங்கள் வழங்கப்படுகிறது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்தி நன்கு தேர்ச்சி பெற வேண்டும். வருகிற மே மாதம் 30 ஆம் தேதி வரை இந்த உணவு வகைகள் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்த மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, கிராமப் பொதுமக்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார்.
விழாவுக்கு ஊராட்சி தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சின்னதுரை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுத்தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். முடிவில் அறிவியல் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் செய்திருந் தனர்.