உள்ளூர் செய்திகள்
இளம்பெண்கள் மாயம்.

இளம்பெண்கள் மாயம்

Published On 2022-04-22 14:41 IST   |   Update On 2022-04-22 14:41:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் 4 இளம்பெண்கள் மாயமானார்கள்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடர்ந்து மாயமாகி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

மாணவிகள் மாயம் தொடர்பாக போலீசாரும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 இளம் பெண்கள் மாயமாகியுள்ளனர். அதன்விபரம் வருமாறு:

அருப்புக்கோட்டை ஜோதிபுரம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (50). இவரது வீட்டில் 17 வயதுடைய உறவுக்கார சிறுமி தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்தசிறுமி வெளியூரில் உள்ள தனது தந்தையை பார்க்கச் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள சொக்கம்பட்டி யைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது 17வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத் தன்று பள்ளிக்குச சென்ற அவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்திராயிருப்பு அருகே உள்ள சேசுபுரம் ஆர்சி தெருவை சேர்ந்தவர் குருவம்மாள். இவரது 20வயதுடைய மகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி தெருவை சேர்ந்தவர் ஹக்கீம் சாகிப் (33). இவரது 19 வயது மகள் திடீரென மாயமானார். பின்னர் அவர் தனது தந்தையிடம் செல்போனில் பேசி யுள்ளார். அப்போது பேஸ்புக் மூலம் பழக்கமான நாகர் கோவிலைச் சேர்ந்த சஜின் என்பவருடன் செல்வ தாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News