உள்ளூர் செய்திகள்
அரியலூர் அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 23ந்தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
அரியலூர்:
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 54வது பட்டமளிப்பு விழா வரும் 23 ஆம் தேதி காலையில் கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது.
அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கல்லூரி அலுவலக பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளனர்.
பட்டம் பெறுபவர்கள் அழைப்பிதழை கையில் கொண்டு வரவேண்டும். விழா அரங்கிற்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை அழைத்து வருவது தவிர்க்க வேண்டும்.
விழா அரங்கிற்குள் காலை 9 மணிக்குள் வந்து இருக்கையில் அமர வேண்டும். விழா முடிந்த பின்னர்தான் அனைவரும் வெளியே செல்ல வேண்டும்.
பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 54வது பட்டமளிப்பு விழா வரும் 23 ஆம் தேதி காலையில் கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது.
அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கல்லூரி அலுவலக பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளனர்.
பட்டம் பெறுபவர்கள் அழைப்பிதழை கையில் கொண்டு வரவேண்டும். விழா அரங்கிற்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை அழைத்து வருவது தவிர்க்க வேண்டும்.
விழா அரங்கிற்குள் காலை 9 மணிக்குள் வந்து இருக்கையில் அமர வேண்டும். விழா முடிந்த பின்னர்தான் அனைவரும் வெளியே செல்ல வேண்டும்.
பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.