உள்ளூர் செய்திகள்
கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி இலக்குகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 24ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சிகளுக்கான இலக்குகளை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர்:
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளின் ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொருட்டு வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான கிராமம், குழந்தை பாதுகாப்பான கிராமம்,
தண்ணீர் நிறைவு பெற்ற கிராமம், தூய்மை மற்றும் பசுமையான கிராமம், தன்னிறைவு கிராமம், சமூக பாதுகாப்பு கிராமம், நல்லாட்சி கிராமம், வளர்ச்சியை ஏற்படுத்தும் கிராமம், ஆகிய ஒன்பது வகையான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் கொடுக்கப்பட்டன.
இதில் ஊராட்சிகளுக்கு தேவைப்படும் இலக்குகளை ஒன்றுக்கு குறையாமலும், மூன்றுக்கு அதிகமாகாமலும் தேர்ந்தெடுத்து அதன் இலக்கை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக எட்டிட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இலக்குகளின் முன்னேற்றத்தை ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.
11.04.2022 முதல் 17.04.2022 வரை அனைத்து கிராம ஊராட்சிகளின் முத்திரை வாரம் கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு ஊராட்சியும் கூட்டத்தை நடத்தி ஊராட் சிகளுக்கு தேவையான இலக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
24.04.2022 தேசிய ஊராட்சிகள் தினத்தன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற உள்ளது. இதில் ஊராட்சி கூட்டத்தில் நீடித்த வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை கிராம சபையில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் கள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளின் ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொருட்டு வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான கிராமம், குழந்தை பாதுகாப்பான கிராமம்,
தண்ணீர் நிறைவு பெற்ற கிராமம், தூய்மை மற்றும் பசுமையான கிராமம், தன்னிறைவு கிராமம், சமூக பாதுகாப்பு கிராமம், நல்லாட்சி கிராமம், வளர்ச்சியை ஏற்படுத்தும் கிராமம், ஆகிய ஒன்பது வகையான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் கொடுக்கப்பட்டன.
இதில் ஊராட்சிகளுக்கு தேவைப்படும் இலக்குகளை ஒன்றுக்கு குறையாமலும், மூன்றுக்கு அதிகமாகாமலும் தேர்ந்தெடுத்து அதன் இலக்கை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக எட்டிட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இலக்குகளின் முன்னேற்றத்தை ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.
11.04.2022 முதல் 17.04.2022 வரை அனைத்து கிராம ஊராட்சிகளின் முத்திரை வாரம் கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு ஊராட்சியும் கூட்டத்தை நடத்தி ஊராட் சிகளுக்கு தேவையான இலக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
24.04.2022 தேசிய ஊராட்சிகள் தினத்தன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற உள்ளது. இதில் ஊராட்சி கூட்டத்தில் நீடித்த வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை கிராம சபையில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் கள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.