உள்ளூர் செய்திகள்
வழக்குப்பதிவு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2022-04-13 17:40 IST   |   Update On 2022-04-13 17:40:00 IST
சாத்தூர் அருகே பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த 8 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர்

சாத்தூர் அருகே இருக்கன்குடியை சேர்ந்தவர் ராஜா (40). இவரது மகளுக்கு இருக்கன்குடி ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரைமகன் செல்போன் வாங்கி கொடுத்ததாகவும், இதனை பார்த்தராஜாவின் மனைவி தெய்வானை (38) தட்டிக்கேட்டதாகவும் இதை கேட்டதும் ஆத்திரமடைந்த செந்தாமரை (48) மற்றும் குடும்பத்தினர், ராஜா, தெய்வானை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர். 

அப்போது செந்தாமரை, சுலைமான், சக்திமான், ஜெயமான், மயில்வாகனன், நீதிமான், ரகுமான், கருணாகரன், அவரது குடும்பத்தினர் 8 பேர் சேர்ந்து ராஜாவை அடித்ததாகவும், தெய்வானை சேலையை பிடித்து இழுத்து இழிவுபடுத்தி தகாத வார்த்தையால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெய்வானை புகார் செய்துள்ளார். 

அதன்படி இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மயில்வாகனன் (53), கருணாகரன் (45) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருக்கன்குடி ஊராட்சித் தலைவர் செந்தாமரை உட்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

Similar News