உள்ளூர் செய்திகள்
முருகலட்சுமி

கர்ப்பிணி பெண் சாவு

Published On 2022-04-11 14:14 IST   |   Update On 2022-04-11 14:14:00 IST
சாத்தூர் அருகே தீக்காயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறந்தார்.
சாத்தூர்

சாத்தூர் அருகே உள்ள நல்லான்பட்டியை சேர்ந்தவர் முருகலட்சுமி(வயது 19). இவருக்கும் நாருகாபுரத்தைச் சேர்ந்த ஜான்பாண்டியனுக்கும் (27) 5மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தாராபுரத்தில் வசித்து வந்தனர். முருகலட்சுமி 3மாத கர்ப்பிணியாக இருந்தார். 

இந்தநிலையில் முருகலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டில் தீப்பிடிப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர்காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயைஅணைத்தனர்.  

வீட்டுக்குள் முருகலட்சுமி உடலில் தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

சம்பவஇடத்திற்கு வந்த இருக்கன்குடி போலீசார் முருகலட்சுமியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் முருகேசுவரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு நேரில்வந்த தடவியியல்துறை நிபுணர்களும் இந்தசம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகின்றனர். 

முருகலட்சுமிக்கு திருமணமாகி 4மாதங்களே ஆவதால் அவரது மர்மமரணம் குறித்து சாத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இளம்பெண் மர்மமரணத்தால் நாருகாபுரம் மற்றும் நல்லான்பட்டி கிராமமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Similar News