உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ராஜபாளையத்தில் கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2022-04-10 17:40 IST   |   Update On 2022-04-10 17:40:00 IST
ராஜபாளையத்தில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி கார்த்திக் (31)-முனீஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு குழந்தை இல்லை. முனீஸ்வரி ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கார்த்திக் ராஜபாளையத்தில் கூலி வேலை பார்த்துவந்தவர். தன்னுடன் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விரக்தியில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News