உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-04-10 13:32 IST   |   Update On 2022-04-10 13:32:00 IST
ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருமானூர் அருகே உள்ள காமரசவல்லி சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மோகன்ராஜ் வயது 20.  இவர் சென்னையில் உள்ள  தனியார் நிறுவன த்தில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.  இவர்  அதே பகுதியைச் சேர்ந்த மாணவி (14 வயது சிறுமியை) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மோகன்ராஜ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதைஅறிந்த மோகன்ராஜின் தந்தை முருகேசன்  சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மோகன்ராஜ் மற்றும் சிறுமியிடமும் விசாரணை செய்தனர்.  

விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என உறுதியானதை அடுத்து மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர். சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த மோகன்ராஜின் தந்தை முருகேசன் மீது வழக்கு பதிந்து தேடி விசாரித்து வருகின்றனர்

Similar News