உள்ளூர் செய்திகள்
அறிவிப்பு ரத்து

ரேசன் விற்பனையாளர்கள் பணி அறிவிப்பு ரத்து

Published On 2022-04-09 16:08 IST   |   Update On 2022-04-09 16:08:00 IST
விருதுநகர், சிவகங்கையில் ரேசன் விற்பனையாளர்கள் பணி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்

விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 94 விற்பனையாளர்கள் மற்றும்  11 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு  கடந்த 26.11.2020 முதல் 15.12.2020 வரை நேர்முக தேர்வு நடந் தது. இந்த நிலையில் 25.8.2021 அன்று நடந்த கூட்டுற வுத்துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் பதிவாளர் கடிதத் தினை செயல்படுத்தும் வகை யில் 2020&ம் ஆண்டில் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பு வதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது-.

இதேபோன்று சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் கோ.ஜினு விடுத்துள்ள செய்தி குறிப் பில், 2020ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்துசெய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News