உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ராணுவகல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

Published On 2022-04-08 14:41 IST   |   Update On 2022-04-08 15:33:00 IST
ராணுவ கல்லூரியில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர்  ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடுனில் உள்ள இராஷட்ரிய இந்தியராணுவக் கல்லூரியில் 2023 ஜனவரி பருவத்தில் சேருவதற்கான 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம்  தேதியில் நடத்தப்பெறும் தேர்வுக்கான விண்ணப்-பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாது-காப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல். விண்ணப்பதாரர்  11  வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் (2.01.2010 முன்னதாகவும் 1.07.2011க்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது) வயது வரம்பில் தளர்வு கிடையாது. 

விண்ணப்படிவம் மற்றும் தகவல்கள் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளவும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் இரட்டையாக தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர், தேர்வாணையம்,  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்-வாணையச்சாலை, பூங்கா நகர், சென்னை -600 003 என்ற முகவரிக்கு 25.04.-2022க்குள் சேர வேண்டும். மேலும்  விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள்     படைவீரர் நல துணை இயக்குநர் தொலைப்-பேசி எண்.04329-221011 அணுகி பயன்பெறலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News