உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-04-05 16:49 IST   |   Update On 2022-04-05 16:49:00 IST
கோவில் விழாவில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
விருதுநகர்

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரும் சின்னபேராளியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதனால் மாரிசெல்வத்திற்கும், விஜயலட்சுமியின் சகோதரர் மாயக்கண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாயக்கண்ணன் குடும்பத்துடன் வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மாரிச்செல்வம் தகராறு செய்து மாயக்கண்ணன் அரிவாளால் வெட்டினார். இதை அவரது சித்தி ஜெயலட்சுமி தடுக்க முயன்றார். ஆனால் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.

Similar News