உள்ளூர் செய்திகள்
கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மலைக்குறவர் இனத்தினர்.

ஜாதிச் சான்றிதழ் வழங்க கோரி கலெக்டரிடம் மனு

Published On 2022-03-29 06:19 GMT   |   Update On 2022-03-29 06:19 GMT
ஜாதிச் சான்றிதழ் வழங்க கோரி மலைக்குறவர் இனத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி பகுதியில் கூடை பிண்ணும் தொழிலில் ஏராளமான மலைக்குறவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக இவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. tஇதனால் பள்ளிகளில் சேர்ந்து பயிலும் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் ஜாதிச் சான்றிதழ் கேட்டு ஆசிரியர்கள் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாணவ, மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் தாங்கள் சிரமப்படுவதாகவும், பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் வெளியேற்றுவதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News