உள்ளூர் செய்திகள் (District)
அரிவாள் வெட்டு

ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-03-14 11:40 GMT   |   Update On 2022-03-14 11:40 GMT
மதுரையில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை

மதுரை வவ்வால்தோட்டம், மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் அழகர்(வயது36) ஆட்டோ டிரைவர்.

இவர் நேற்றுமாலை ஒத்தக்கடை- மேலூர் மெயின்ரோட்டில் ஆட்டோவை  நிறுத்திவிட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 5பேர் கும்பல்  சரமாரியாக அரிவாளால்  அவரை வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் அழகர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அழகர் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

விசாரணையில் மேலூர் வெள்ளரிப்பட்டியை சேர்ந்த மோகன், விவசாய கல்லூரி குடியிருப்பை சேர்ந்த அருண் மற்றும் 3பேர் அழகரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அழகர் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு மருதூரை சேர்ந்த பூமாதேவி என்பவரிடம் ரூ.60ஆயிரம் கடன் வாங்கி யுள்ளார். இதனை அவர் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பூமாதேவி கும்பல் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. 

இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அழகர் மீது கடந்த 2016ம் ஆண்டு மேலூர் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலு வையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News