உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-03-02 09:25 GMT   |   Update On 2022-03-02 09:25 GMT
தொழிலில் நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:

தொழிலில் நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அடுத்த தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (33). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத் தன்று வீட்டில் வாந்தி எடுத்து கொண்டி ருந்தார். இதுகுறித்து விசாரித்த போது தான் விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். 

உடனடியாக உறவி னர்கள் மகேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தபாடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News