உள்ளூர் செய்திகள்
பண மோசடி

கடலூர் முதியவரிடம் ரூ. 25 லட்சம் பண மோசடி- 2 பேர் கைது

Published On 2022-02-26 15:42 IST   |   Update On 2022-02-26 15:42:00 IST
தொழிலில் பங்குதாரராக்குவதாக கூறி கடலூர் முதியவரிடம் ரூ. 25 லட்சம் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் வண்டிப்பாளையம் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 2018- ம் ஆண்டு அறிமுகமான புதுச்சேரியை சேர்ந்த ராஜ் மற்றும் சாய்பிரியா ஆகிய இருவரும் தாங்கள் சொந்தமாக கோவையில் கால் டாக்சி தொழில் செய்து வருவதாகவும், தற்போது கோயம்புத்தூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கால் டாக்ஸி காண்ட்ராக்ட் எடுக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் அதிக லாபம் கிடைக்கும் கூறி அதில் பங்குதாரராக சேரும்படி கேட்டனர்.

பின்னர் இவர்கள் 2 பேரும் தற்போது தங்களிடம் பணம் இல்லை. மொத்த பணத்தையும் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பெயரிலேயே காண்ட்ராக்ட் எடுப்பதாக கூறியுள்ளார்கள். அதனை நம்பி ஆறுமுகம், 2 பேர் தெரிவித்த 15 வங்கி கணக்குகளில் ரூ. 25 லட்சத்து 80 ஆயிரத்து 560 வரை பணம் செலுத்தியுள்ளார்.

ஆனால் ஆறுமுகம் பெயரில் காண்ட்ராக்ட் எடுக்காமல் 2 பேர் பெயரில் கான்ட்ராக்ட் எடுத்து எந்தவிதமான பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்கள் .

இதனை அறிந்த ஆறுமுகம் 2 பேரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது , ஆறுமுகத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆறுமுகம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. . மேலும் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் அறிவுறுத்தலின் பெயரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் கவுரி ஆகியோர் புதுச்சேரியில் வசித்து வந்த ராஜ் (வயது 39), சாய்பிரியா வயது (37) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் 2 பேரும் மேலும் பல நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பெருமளவில் பணத்தை பெற்றுகொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன்கூறுகையில் பொதுமக்கள் யாரை பற்றியும் முழுமையாக விசாரிக்காமலும் , அவர்களது நிரந்தர முகவரி தெரியாமலும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் , மேலும் அரசு வேலைக்கோ இதர தனியார் வேலைக்கோ முன் பின் தெரியாத பெயர் நபரிடம் அறிமுகமாகி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அனைத்து அரசு வேலைகளும் முறைப்படி வழிகாட்டுதலுடன் நேரடியாகவோ தேர்வு மூலமாசுவோ தேர்ந்தெடுக்கப்படுவதால் இனிவரும் காலங்களில் இதுபோல் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறி உள்ளார்.

Similar News