உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே சாலையில் மயங்கி விழுந்தவர் திடீர் மரணம்
கடலூர் அருகே சாலையில் மயங்கி விழுந்தவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் டாக்டர் பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.