உள்ளூர் செய்திகள்
.

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-02-23 09:19 GMT   |   Update On 2022-02-23 09:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்துள்ள பெரியதோப்பு பகுதியை சேர்ந்தவர் மரகதவேல். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவரது மனைவி நதியா (வயது32).

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா வீட்டில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். 

இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News