உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று புதிதாக 24,418 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று 46 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் புத்தாண்டிற்குப் பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த 22-ம் தேதி 30 ஆயிரத்தை தாண்டி 30,744 ஆக பதிவானது. அதன்பின் குறைய ஆரம்பித்துள்ளது.
நேற்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 24,418 ஆக பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதிகரித்துள்ளது.
இன்று 46 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 37 ஆயிரத்து 506-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்...மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் அல்ல- தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு