உள்ளூர் செய்திகள்
சக்திவேல்

சமையல் மாஸ்டர் விபத்தில் பலி

Published On 2022-01-17 08:46 GMT   |   Update On 2022-01-17 08:46 GMT
திண்டுக்கல் அருகே மகன் கண் முன் சமையல் மாஸ்டர் விபத்தில் பலியானார்
செந்துறை:

நத்தம் அருகே கோசுக் குறிச்சி சாயக்காரன் பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது35). இவர் திருப்பூரில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்.

இவரது மகன் ஸ்ரீதர் (6). 2பேரும் மோட்டார் சைக்கிளில் மங்களபட்டிக்கு சென்று விட்டு திரும்பும்போது திடீரென நிலைதடுமாறி பைக் மைல் கல் மீது மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஸ்ரீதர் படுகாயங்களுடன் துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News