உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-19 09:06 GMT   |   Update On 2021-12-19 09:06 GMT
கஸ்தூரியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியை சேர்ந்த காட்டு ராஜா மனைவி கஸ்தூரி (வயது 47). இவர் கடந்த 4  வருடமாக உடல் நலம் சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது . இந்த மனவேதனையில் இருந்தவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய காட்டுராஜா மனைவி தூக்குப் போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கஸ்தூரியை  பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News