செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி போலீசார் ஜாகீர்நாட்றம்பள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக பெத்ததாளப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.