சினிமா செய்திகள்
null

வருமான வரித்துறை அபராதம்: விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

Published On 2026-02-05 19:57 IST   |   Update On 2026-02-05 19:59:00 IST
  • புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு.
  • நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.

வருமான வரித்துறையின் அபராத நோட்டீசுக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு விஜய் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில், நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்தது

இந்நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.  

Tags:    

Similar News