செய்திகள்
மரத்தில் டிராக்டர் மோதி தொழிலாளி பலி
மரத்தில் டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி தாலுகா கோடிப்பள்ளி பக்கமுள்ள சீலேப்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் டிராக்டரில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனிராஜ் (30) என்பவர் ஓட்டி வந்தார். சீலேப்பள்ளி பக்கமாக வந்த போது திடீரென்று டிராக்டர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் நாகேஷ் கீழே தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.