செய்திகள்
ஒரேநாளில் 37,954 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 359 இடங்களிலும் 9-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. முகாமில் கொரோனா கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்து கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டு சென்றனர். மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 13 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 881 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.